புதினா, மல்லி மற்றும் கறிவேப்பிலை ஒரு வாரம் வரை அப்படியே ஃப்ரெஷ்ஷாக இருக்க…
பாலை லேசாக சூடுபடுத்தி அதில் அரை ஸ்பூன் சர்க்கரை போட்டு அதில் தயிருக்காக உறை ஊற்றி 8 மணி நேரம் கழித்து பார்த்தால் கெட்டித்தயிராக இருக்கும்.
குக்கரில் பருப்பு வேகவைக்கும் போது, நேரடியாக குக்கரை பயன் படுத்த வேண்டாம். முதலில் பருப்பை திறந்த பாத்திரத்தில் வேகவைத்து அதில் உள்ள நுரையை நீக்கவும். இந்த நுரைகாரணமாக, யூரிக் அமிலம் அதி கரித்து மூட்டு வலி ஏற்படுகிறது.
கேசரி செய்யும்போது நீரின் அளவைக்குறைத்து பால் கலந்து செய்தால், நல்ல மணத்துடன் இருக்கும். அதில் பேரீச்சை, அன்னாசி பழங்களையும் வெட்டிப்போட்டு பழக்கேசரி செய்தால் சுவையும், சத்தும் கூடும்.
புதினா, மல்லி மற்றும் கறிவேப்பிலைகளை எப்பொழுதும் தண்டுடன் அப்படியே வைக்கக்கூடாது. கழுவி நன்கு ஃபேன் காற்றில் காய வைத்த பின் இலைகளை மட்டும் கிள்ளி ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் ஸ்டோர் செய்து வைத்தால் போதும், ஒரு வாரம் வரை அப்படியே ஃப்ரெஷ்ஷாக இருக்கும்
நீங்கள் கடலை எண்ணெயை பயன்படுத்துவது உண்டு என்றால் முட்டை வேக வைக்கும் பொழுது நாலைந்து சொட்டுகள் கடலை எண்ணெய் சேர்த்து கொஞ்சம் கல் உப்பு போட்டு வைத்தால் போதும் முட்டையை வேக வைத்த பின் பிரிக்கும் பொழுது கொஞ்சம் கூட ஒட்டாமல் பிரித்து விட முடியும்.
0
Leave a Reply